பஸ்சிற்குள் வைத்து எல்.கே.ஜி. சிறுமிக்கு பாலியல் தொல்லை: டிரைவர் கைது


பஸ்சிற்குள் வைத்து எல்.கே.ஜி. சிறுமிக்கு பாலியல் தொல்லை: டிரைவர் கைது
x

முகமது ஆஷிக் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

மலப்புரம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கண்மணம் அடுத்த துச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஆஷிக்(வயது 28). இவர், கடுங்கத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் இவர், பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. படித்து வரும் சிறுமியை பஸ்சிற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் கல்பகஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி முகமது ஆஷிக்கை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான அவர், மலப்புரம் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக துச்சக்காடு பகுதியில் உள்ள முகமது ஆசிக்கின் வீட்டிற்கு சிலர் சென்று அவரையும், அவருடைய சகோதரியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரிலும் கல்பகஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story