மக்களவை 'ஜனநாயகமற்ற' முறையில் நடத்தப்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மக்களவை 'ஜனநாயகமற்ற' முறையில் நடத்தப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
மக்களவை 'ஜனநாயகமற்ற' முறையில் நடத்தப்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

மக்களவையில் தனக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், சபை "ஜனநாயகமற்ற" முறையில் நடத்தப்படுகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சபாநாயகர் தன்னைப் பற்றிக் கருத்துத் தெரிவித்ததாகவும், தான் பேச வாய்ப்பளிக்காமல் சபையை ஒத்திவைத்ததாகவும், இதேபோல கடந்த வாரத்திலும் தனக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சபையின் கண்ணியத்தை நிலைநிறுத்த உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தி இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். சபாநாயகர் இந்தக் கருத்தைச் சொல்ல என்ன காரணம் என்பது குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய், கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் மக்களவையில் கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூர் உட்பட சுமார் 70 காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள், மக்களவை சபாநாயகரைச் சந்தித்து, அவையில் ராகுல் காந்தி பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு எதிராக கேள்வி எழுப்பியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

X

Daily Thanthi
www.dailythanthi.com