கேரளாவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

வீட்டின் பெரிய இரும்பு கேட்டை வேகமாக மூடிவிட்டு உள்ளே சென்று கதவுகளை தாழிட்டு கொண்டனர்.
காட்டு யானை
Published on

மலப்புரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள கருவாரகுண்டு மலைப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நேற்று திடீரென அடர்ந்த காட்டில் இருந்து ஒற்றை காட்டு யானை ஒன்று வழி தவறி நுழைந்தது.

உலா வந்த யானை

காட்டுப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த அந்த காட்டு யானை, அங்குள்ள குடியிருப்பு சாலைகளில் ஆக்ரோஷமாக உலா வர தொடங்கியது. சாலையின் நடுவே யானை நடந்து வருவதை கண்ட அந்த வீதியின் குடியிருப்பு வாசிகள் நிலைகுலைந்து போயினர்.

அலறியடித்து ஓடிய மக்கள்

யானை தங்களை தாக்க வரலாம் என்ற பயத்தில், வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு தங்களது வீடுகளுக்குள் ஓடினர். மேலும், யானை வீட்டிற்குள் நுழைந்து விடாமல் இருப்பதற்காக, வீட்டின் பெரிய இரும்பு கேட்டை வேகமாக மூடிவிட்டு உள்ளே சென்று கதவுகளைத் தாழிட்டுக் கொண்டனர்.

பதறவைக்கும் காட்சிகள்

இந்த பதறவைக்கும் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை பாதுகாப்பாக மீட்டு மீண்டும் அடர்ந்த காட்டு பகுதிக்குள் விரட்டுவதற்கான தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com