மத்தியப்பிரதேசம்: உணவு விருந்து சாப்பிட்ட 50 பேர் உடல் நலம் பாதிப்பு!

மத்தியப்பிரதேசத்தில் உணவு விருந்து விஷமாக மாறியதில் 50 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
மத்தியப்பிரதேசம்: உணவு விருந்து சாப்பிட்ட 50 பேர் உடல் நலம் பாதிப்பு!
Published on

குவாலியர்,

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தாமோரா என்ற கிராமத்தில் விருந்தில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் 5 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் குவாலியர் மாவட்டத்தில் உள்ள மொரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகவும் பாதிக்கப்பட்ட 5 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக கஜ்ரா ராஜா மருத்துவக் கல்லூரி (ஜி.ஆர்.எம்.சி) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com