லடாக்கில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவு

லடாக்கில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லே,

யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று காலை 6.10 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.

மேலும் ரிக்டர் அளவில் 18 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அளவிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிர் சேதங்கள் மற்றும் பொருள் சேதங்கள் பற்றிய உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com