மராட்டியத்தில் இன்று புதிதாக 3,959 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டியத்தில் புதிதாக 3 ஆயிரத்து 959 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 150 பேர் உயிரிழந்தனர்.
மராட்டியத்தில் இன்று புதிதாக 3,959 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன்படி அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 959 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இங்கு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 14 ஆயிரத்து 273 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 15 லட்சத்து 69 ஆயிரத்து 090 பேர் குணமடைந்து உள்ளனர்.

அதில் இன்று மட்டும் 6 ஆயிரத்து 748 பேர் ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 99 ஆயிரத்து 151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் மேலும் 150 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 45 ஆயிரத்து 115 பேர் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை

மும்பையில் புதிதாக 576 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் நகரில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 63 ஆயிரத்து 052 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நகரில் மேலும் 23 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலியானோர் மொத்த எண்ணிக்கை 10,419 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 16,262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,35,657 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com