

மும்பை,
மராட்டியத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீசத் தொடங்கி உள்ளது. கடந்த ஜனவரியில் கட்டுக்குள் வந்த கொரோனா, பிப்ரவரி மாதம் முதல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த சூழலில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், சுற்றுலாத்துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரேக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரேக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் முதல்-மந்திரியின் வர்ஷா பங்களாவில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார்.
முன்னதாக உத்தவ் தாக்கரேயும், அவரது மனைவி ராஷ்மி தாக்கரேயும் கடந்த 11-ந் தேதி மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்தநிலையில் ராஷ்மி தாக்கரே தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.