மராட்டியத்தில் மேலும் 1,165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் மேலும் 1,165 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மராட்டியத்தில் மேலும் 1,165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 59 ஆயிரத்தைக் கடந்திருக்கக்கூடிய நிலையில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் மராட்டியத்தில் மேலும் 1,165 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் அதிக அளவாக அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,228-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 48 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 779 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 3,800 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com