மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிற்கு கொலை மிரட்டல்

ஏக்நாத் ஷிண்டேவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிற்கு கொலை மிரட்டல்
Published on

மும்பை,

மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய துணை முதல்-மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் வந்ததாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோரேகான், ஜே ஜே மார்க் காவல் நிலையங்களுக்கும், மாநில அரசின் தலைமையகமான மந்திராலயாவில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் இ-மெயில் மூலம் வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த அழைப்பை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டேவிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com