ஆக்சிஜன் சிலிண்டர்களை ரெயில்களில் கொண்டு வர அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி கோரிக்கை

ரெயில்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு வர அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆக்சிஜன் சிலிண்டர்களை ரெயில்களில் கொண்டு வர அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி கோரிக்கை
Published on

மும்பை,

ரெயில்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மராட்டிய அரசு கோரிக்கை விடுத்து உள்ளது. மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி உள்ளது.

இதன் காரணமாக ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை வாங்கி வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே மராட்டியத்துக்கு ரெயில்களில் ஆக்சிஜன் கொண்டு வர அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

போக்குவரத்து செலவை குறைக்கும் என்பதால் ரெயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டுவர அனுமதிக்குமாறு மத்திய அரசை மராட்டிய அரசு கேட்டு கொண்டு உள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com