மராட்டியத்தில் புதிதாக 43,211 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் புதிதாக 43,211 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் ஆயிரத்திற்கும் கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 43 ஆயிரத்து 211 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 33 ஆயிரத்து 356 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 67 லட்சத்து 17 ஆயிரத்து 125 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 658 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று எண்ணிக்கை தற்போது 1,605 (இன்று மட்டும் 238 பேர்) ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com