மராட்டியத்தில் புதிதாக 53,605 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 864 பேர் பலி

மராட்டிய மாநிலத்தில் இன்று புதிதாக 53,605 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மராட்டிய மாநிலத்தில் உச்சமடைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மெல்லமெல்ல குறைய தொடங்கி உள்ளது.

இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, மராட்டியத்தில் இன்று புதிதாக 53 ஆயிரத்து 605 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 53 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 28 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 82 ஆயிரத்து 266 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 43 லட்சத்து 47 ஆயிரத்து 592 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரேநாளில் 864 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 75 ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com