மாலத்தீவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதியுதவி - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

மாலத்தீவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
மாலத்தீவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதியுதவி - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது சாலியா, புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் இரு நாடுகளுக்கு இடையிலான பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா, மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு அம்சங்கள் ஒன்றோடொன்று இணைந்தவை. எனவே, இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவ நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். தீவுநாடான மாலத்தீவில் தொழில்களை தொடங்க அதிகமான வாய்ப்புகள் காத்திருக்கிறது. அதற்காக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக தொடர்புகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். மாலத்தீவு மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரம் கோடியை நீண்டகால கடனுதவியாக இந்தியா வழங்கும் என்று தெரிவித்தார்.

மேலும் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது சாலியா, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com