மேடையில் கவிதை வாசித்துக் கொண்டிருந்த நபர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழப்பு

கவிதை விழாவில் கவிதை வாசித்துக் கொண்டிருந்தபோது அவர் திடீரென சரிந்து விழுந்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

உதம்சிங்நகர்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் மேடையில் கவிதை வாசித்துக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதம்சிங்நகர் மாவட்டத்தில் உள்ள பந்த்நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கவிதை விழாவில் ஒருவர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சரிந்து விழுந்தார். இதையடுத்து அவரை பந்த்நகரில் உள்ள மருத்துவமனைக்கு விழா ஏற்பாட்டாளர்கள் அழைத்துச் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்த நிலையில் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு வயது 68. அவரது உடலை மதுராவில் அவரது குடும்பத்தினர் தகனம் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com