

சென்னை,
மாநிலத்தின் மின் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் தமிழ்நாடு முழுவதும் மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை கணிசமாக உயர்த்துவது ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய(TNEB) தலைமையகத்தில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யின் தொழில்சார் ஆலோசனை மற்றும் நிதியுதவி பெறும் ஆராய்ச்சிப் பிரிவின் (IC&SR) தலைவர் மனு சந்தானம் ஆகியோரிடையே இந்த ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.