

மும்பை,
நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவலானபோது, மராட்டியத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் இருந்தனர். கொரோனா 2வது அலையின் உச்சத்தில் அதிக பாதிப்புகளை மராட்டியம் சந்தித்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றுகள் குறைந்து வருகின்றன. எனினும், கொரோனா 3வது அலை ஏற்பட கூடிய சாத்தியம் பற்றி நிபுணர்கள் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளனர்.
இதுபற்றி மராட்டிய சுகாதார துறையின் கூடுதல் முதன்மை செயலாளர் டாக்டர் பிரதாப் வியாஸ் கூறும்போது, மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில், வருகிற 3வது வாரத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2 லட்சம் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள தனியாக அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.