மராட்டியம்: சாலை விபத்தில் 5 பேர் பலி

விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மொஹோல் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
புனே,
மராட்டியத்தின் பான்வெல் நகரில் இருந்து அக்கல்கோட் நோக்கி சிலர் கார் ஒன்றில் சென்றனர். சாமி கும்பிடுவதற்காக சென்ற அவர்களின் கார் நேற்றிரவு 11 மணியளவில் சோலாப்பூர்-புனே தேசிய நெடுஞ்சாலையில் மொஹோல் பகுதியருகே சென்றபோது, விபத்தில் சிக்கியது. காரின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததில், கார் சாலையோர மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் பலியானார்கள். பெண் ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் சிகிச்சைக்காக மொஹோல் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






