மருத்துவ கல்லூரி மாணவியின் தங்கச்சங்கிலி திருட்டு

உப்பள்ளி மருத்துவ கல்லூரி மாணவியின் தங்கச்சங்கிலி திருடுபோன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மருத்துவ கல்லூரி மாணவியின் தங்கச்சங்கிலி திருட்டு
Published on

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா வித்யாநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கிம்ஸ் மருத்துவ கல்லூ உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் சுஜாதா என்பவர் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் கல்லூக்கு சென்றார்.

அங்கு அவருக்கு மருத்துவ பிரிவில் செய்முறை வகுப்பு எடுக்கப்பட்டது. இதற்காக அவர் தான் கழுத்தில் அணிந்திருந்த 18 கிராம் எடை கொண்ட தங்கச்சங்கிலியை கழற்றி பையில் வைத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் வகுப்பு முடிந்து வந்து பார்த்த போது பையில் இருந்த தங்கச்சங்கிலி காணவில்லை.

அதை யாரோ திருடிச்சென்றுவிட்டது சுஜாதாவுக்கு தெரியவந்தது. அந்த தங்கச்சங்கிலியின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சுஜாதா, இதுபற்றி வித்யா நகர் போலீஸ் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னா மருத்துவ கல்லூரிக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். இச்சம்பவம் மருத்துவ கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com