துருக்கியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலம் இந்தியா வருகை

துருக்கியில் இருந்து விமானம் மூலமாக மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன.
துருக்கியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலம் இந்தியா வருகை
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருவதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சைக்கான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

இந்த சூழலை எதிர்கொள்ள இந்திய மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு நாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வருகின்றன.

அந்த வகையில் துருக்கி நாட்டில் இருந்து மருத்துவ உபகரணங்கள் அடங்கிய விமானம் இன்று இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது. துருக்கியைச் சேர்ந்த டர்க்கிஷ் ரெட் கிரெசெண்ட் சொசைட்டி என்ற அமைப்பின் மூலம் இந்த மருந்துப் பொருட்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com