சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங். காரிய கமிட்டி கூட்டம் நிறைவு

டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நிறைவு பெற்றது.
Photo Credit: PTI
Photo Credit: PTI
Published on

புதுடெல்லி,

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு டெல்லியில் முதல்முறையாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்று இருக்கலாம் என்று தெரிகிறது. காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மூத்த நிர்வாகிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு இருக்கலாம் எனவும் பரவலாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com