மேகாலயா: மந்திரி சபை இன்று மாலை மாற்றியமைப்பு


மேகாலயா:  மந்திரி சபை இன்று மாலை மாற்றியமைப்பு
x

மேகாலயாவில் புதிய மந்திரிகளின் பதவியேற்பு விழா இன்று மாலை 5 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளது.

ஷில்லாங்,

மேகாலயாவில் என்.பி.பி. கட்சி தலைமையிலான மேகாலயா ஜனநாயக கூட்டணியை அமைத்து முதல்-மந்திரி கன்ராட் கே சங்மா ஆட்சி செய்து வருகிறார். அவருடைய அரசில், மந்திரி சபையில் மாற்றங்களை மேற்கொள்ள முதல்-மந்திரி முடிவு செய்துள்ளார்.

இதனை முன்னிட்டு, அம்பரீன் லிங்டோ, கமிங்கோன் யம்போன், ரக்கம் சங்மா மற்றும் என்.பி.பி.யின் அபு தாஹிர் மொண்டல், யு.டி.பி.யின் பால் லிங்டோ மற்றும் கிர்மென் ஷில்லா, எச்.எஸ்.பி.டி.பி.யின் ஷக்லியார் வார்ஜ்ரி மற்றும் பா.ஜ.க.வின் ஏ.எல். ஹெக் ஆகிய 8 மந்திரிகள் இன்று ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், கவர்னர் மாளிகையில் கவர்னர் விஜயசங்கரை முதல்-மந்திரி கன்ராட் கே சங்மா இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, மந்திரிகளின் ராஜினாமா கடிதங்களை வழங்கினார். இதனை அடுத்து, புதிய மந்திரிகளின் பதவியேற்பு விழா இன்று மாலை 5 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளது.

1 More update

Next Story