மேகதாது அணைக்கான முதற்கட்ட ஆய்வுகளை நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
மேகதாது அணைக்கான முதற்கட்ட ஆய்வுகளை நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி
Published on

புதுடெல்லி,

காவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கர்நாடக திட்டமிட்டுள்ள இந்த திட்டத்துக்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுகளை நடத்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com