காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பின் உறுப்பினர் கைது

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பின் உறுப்பினர் ஒருவரை சி.ஆர்.பி.எப். வீரர்கள் கைது செய்துள்ளனர்.
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பின் உறுப்பினர் கைது
Published on

பாராமுல்லா,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், அந்த பகுதியை சேர்ந்த பரூக் அகமது மாலிக் என்பவரை கைது செய்தனர்.

அந்த நபரிடம் இருந்து, சீன கையெறி குண்டு ஒன்று, பிஸ்டலுக்கான 2 மேகசீன்கள் மற்றும் 16 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதுபற்றி இந்திய ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com