அரியானாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு

அரியானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியானாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு
Published on

புது டெல்லி,

அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 7.01 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.31 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.42 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

முன்னதாக, நேற்று மட்டும் அருணாச்சல பிரதேசத்தில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com