அசாமில் ரிக்டர் 2.9 அளவில் லேசான நிலநடுக்கம்


அசாமில் ரிக்டர் 2.9 அளவில் லேசான நிலநடுக்கம்
x

அசாமில் ரிக்டர் 2.9 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

திஸ்பூர்,

அசாம் மாநிலம் கர்பி ஆங்க்லாங் பகுதியில் இன்று அதிகாலை 2.40 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.9 அளவாக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story