ஜம்மு மற்றும் காஷ்மீர் வனப் பகுதியில் பாதுகாப்பு படை என்கவுண்டர்; தீவிரவாதி பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் வனப் பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். #SecurityForce
ஜம்மு மற்றும் காஷ்மீர் வனப் பகுதியில் பாதுகாப்பு படை என்கவுண்டர்; தீவிரவாதி பலி
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் வனப் பகுதியில் பாதுகாப்பு படை இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டது. இந்த நிலையில் அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். தொடர்ந்து அருகிலுள்ள முகாம்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பு படையினர் அங்கு உடனடியாக சென்றனர். அவர்கள் அந்தப் பகுதியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com