சுதந்திரத்திற்கு பின் நாட்டில் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு: உள்துறை மந்திரி அமித்ஷா

நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்தியாவின் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
சுதந்திரத்திற்கு பின் நாட்டில் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு: உள்துறை மந்திரி அமித்ஷா
Published on

காந்திநகர்,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற 49-வது பால் தொழில் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்தியாவின் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், பால் பதப்படுத்தும் திறன் நாளொன்றுக்கு சுமார் 126 மில்லியன் லிட்டர் ஆகும். இது உலகிலேயே அதிக அளவில் உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காக பால்பண்ணை துறையும் உழைத்துள்ளது. கார்ப்பரேட்டிவ் பால் பண்ணையின் பங்களிப்பு மிகப்பெரியது.பால் துறை இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.

பால் துறையின் பங்களிப்பு ரூ. 10 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. 45 கோடி மக்கள் அதனுடன் தொடர்புடையவர்கள். இவ்வாறு அமித் ஷா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com