பண மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பார்தியிடம் 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை

பண மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பார்தியிடம் 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
பண மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பார்தியிடம் 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை
Published on

புதுடெல்லி,

ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவரும், முன்னாள் முதல்மந்திரியுமான லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு சொந்தமான 12 இடங்களில் அண்மையில் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இதன் தொடர்ச்சியாக லாலுபிரசாத் மகளும் டெல்லி மேல்சபை எம்.பியுமான மிசா பார்தி மற்றும் அவரது கணவரான சைலேஷ்குமார் ஆகியோருக்கு சொந்தமான டெல்லியில் உள்ள பண்ணை வீடு மற்றும் ஒருநிறுவனத்திலும் கடந்த 8ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு பண மோசடி நடந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை முன்பு நிதி பரிவர்த்தனை ஆவணங்களுடன் மிசா பராதி மற்றும் அவரது கணவரும் இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

அதன்படி லாலுபிரசாத் மகள் மிசாபார்தி காலை 11 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர் ஆனார். அவரிடம் கிட்டத்தட்ட 8 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். இன்றைய விசாரணைக்கு மிசா பார்தியின் கணவர் சைலேஷ்குமார் ஆஜராகவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com