மைசூருவில் எம்.எல்.சி. மகனிடம் ரூ.2 லட்சம் அபேஸ்

மைசூருவில் நூதன முறையில் எம்.எல்.சி. மகனிடம் இருந்து ரூ.2 லட்சத்தை மர்ம நபர் அபேஸ் செய்து கொண்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
மைசூருவில் எம்.எல்.சி. மகனிடம் ரூ.2 லட்சம் அபேஸ்
Published on

மைசூரு:-

பா.ஜனதா எம்.எல்.சி. மகன்

காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்து வருபவர் எச்.விஸ்வநாத். இவர் மேல்சபை உறுப்பினராக, அதாவது எம்.எல்.சி.யாக இருந்து வருகிறார். இவரது மகன் அமித். இவர் தொழில் அதிபர் ஆவார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உங்களுடைய வங்கி கணக்கு எண்ணுடன், ஆதார் கார்டு எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதன்பேரில் தனது வங்கி கணக்கு எண், ஆதார் கார்டு எண், பான் கார்டு எண், செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண் உள்ளிட்ட அந்த மர்மநபர் கேட்ட அனைத்து தகவல்களையும் அமித் கூறியிருக்கிறார்.

ரூ.1.99 லட்சம் அபேஸ்

தகவல்களை பெற்றுக் கொண்ட சிறிது நேரத்தில் அந்த மர்ம நபர் இணைப்பை துண்டித்துவிட்டார். அதன்பின் நேற்று முன்தினம் அமித், ஏ.டி.எம். மையத்திற்கு சென்று தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முயன்றார். ஆனால் அவரது வங்கி கணக்கில் போதிய அளவு பணம் இல்லை என்று தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அமித் உடனடியாக தான் சேமிப்பு கணக்கு

வைத்திருக்கும் வங்கிக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார்.அப்போது தான் மர்ம நபர் அவரை ஏமாற்றி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.99 லட்சத்தை அபேஸ் செய்து கொண்டதை அமித் உணர்ந்தார்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

பின்னர் இதுபற்றி அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் இந்த நூதன மோசடி பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த மர்ம நபரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com