தீவிரவாத தாக்குதல், ஊழல் இல்லை என்பதே மோடியின் முக்கிய சாதனை - நிர்மலா சீதாராமன் கூறுகிறார்

தீவிரவாத தாக்குதல், ஊழல் இல்லை என்பதே மோடியின் முக்கிய சாதனை என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தீவிரவாத தாக்குதல், ஊழல் இல்லை என்பதே மோடியின் முக்கிய சாதனை - நிர்மலா சீதாராமன் கூறுகிறார்
Published on

புதுடெல்லி,

பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

அனைத்து பா.ஜனதா நிர்வாகிகளும் 2 முக்கியமான சாதனைகளை பிரசாரம் செய்ய வேண்டும். 2014-ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் எதுவும் நடை பெறவில்லை. நாடு 5 ஆண்டுகளாக அமைதியாக உள்ளதை மக்களுக்கு நினைவு படுத்த வேண்டும். எல்லையில் கூட எதிரி படைகள் நுழைய முயல்வது ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டு வருகிறது.

அதே அளவுக்கு முக்கியத்துவம் உள்ள மற்றொரு பிரச்சினை கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் என்பதே இல்லை. ஏன், ஊழல் தொடர்பான ரகசிய பேச்சு கூட பிரதமர் மோடி தலைமையிலான அரசில் இல்லை. எனவே சாதாரண மனிதன் அமைதியாகவும், ஊழலில் இருந்து தப்பியும் வாழ முடிகிறது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com