

மலப்புரம்,
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் பரதபுழா ஆற்றின் பாலத்திற்கு அடியில் கடந்த ஜனவரி 5ந்தேதி 5 கண்ணி வெடிகள், 2 உலோக பொருட்கள் மற்றும் 6 கோணி பைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் மலப்புரத்தில் குட்டிபுரம் ரெயில்வே மேம்பாலம் அருகே நீருக்குள் இருந்து அதிக அளவிலான துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் இன்று கைப்பற்றப்பட்டன.
அவற்றில் 7.62 மி.மீட்டர் அளவுள்ள 400 துப்பாக்கி குண்டுகள், 6 பல்ஸ் ஜெனரேட்டர்கள், 2 டியூப் லாஞ்சர்கள் உள்ளிட்டவை சில கோணி பைகளில் இருந்துள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கும்பல் பற்றி விசாரணை முடிவில் தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.
#latesttamilnews