கேரளாவில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று - முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று - முதல்வர் பினராயி விஜயன்
Published on

திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவில் முதன் முதலில் கொரோனா தொற்று பதிவான கேரளாவில், சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டது.

இதையடுத்து வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,697 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உள்ளது.

இவர்களில் 53 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 19 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 3 பேருக்கு நோயாளிகளின் தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இன்று 90 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,324 ஆக உயர்ந்துள்ளது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com