தாய்மொழி உங்கள் கண்பார்வை போன்றது, பிற மொழிகள் கண் கண்ணாடி போன்றது - வெங்கய்யா நாயுடு

தாய்மொழி உங்கள் கண்பார்வை போன்றது, பிற மொழிகள் உங்களுக்கு கண் கண்ணாடி போன்றது என்று துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கூறினார்.
தாய்மொழி உங்கள் கண்பார்வை போன்றது, பிற மொழிகள் கண் கண்ணாடி போன்றது - வெங்கய்யா நாயுடு
Published on

நாக்பூர்

மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சர்வதேச கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசும் போது கூறியதாவது;-

அறிவியல் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளை இந்திய மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும், அரசாங்கம் அதை நோக்கி செயல்பட வேண்டும்.

உங்கள் ஆராய்ச்சி ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தால், மக்கள் அதைப் புரிந்து கொள்ள முடியாது. இந்தியாவில் 760 க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன, மேலும் அதை அவர்களது சொந்த மொழியில் சொன்னால் மக்கள் அதை நன்றாகப் பாராட்டுவார்கள்.

அதனால்தான் எங்கு சென்றாலும், மக்கள் தங்கள் தாய்மொழியை அறிந்து கொள்ளவும், ஊக்குவிக்கவும், பிரச்சாரம் செய்யவும் சொல்கிறேன்.

ஆங்கிலம் தெரிந்து கொள்வதில் தவறில்லை, ஆனால் ஆங்கிலம் தெரிந்து கொள்வதற்கு முன், நீங்கள் உங்கள் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தாய்மொழி உங்கள் கண்பார்வை போன்றது, பிற மொழிகள் உங்கள் கண் கண்ணாடி போன்றது. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும், ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும்.

எனவே, அனைத்து ஆராய்ச்சி முடிவுகள், போதனைகள் மற்றும் பிரசாரங்கள் பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதைக் காண்பது அரசாங்கத்தின் கடமையாகும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com