ஆர்யன் கானின் கார் டிரைவரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கார் டிரைவரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆர்யன் கானின் கார் டிரைவரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை
Published on

மும்பை,

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த சனிக்கிழமை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் போதைப்பொருளுடன் இருந்ததாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் (வயது 23) உள்பட 8 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஆர்யன் கான் கார் டிரைவரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com