மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்ந்து 5 ஆயிரத்து 243 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு
Published on

மும்பை,

மும்பை பங்குச்சந்தை இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்ந்து 75 ஆயிரத்து 243 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. சென்செக்ஸ் குறியீடு 75 ஆயிரம் புள்ளிகளை கடப்பது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இந்திய பங்குச்சந்தைகளில் ஐடி மற்றும் வங்கித்துறை பங்குகள் கணிசமான ஏற்றம் கண்டுள்ளன.

மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 300 புள்ளிகள் அதிகரித்து 22 ஆயிரத்து 908 புள்ளிகளை எட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com