கொப்பலில், பணத்தகராறில் கர்ப்பிணியை கொன்று உடல் எரிப்பு

கொப்பலில் பணத்தகராறில் கர்ப்பிணியை கொன்று உடல் எரிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கொப்பலில், பணத்தகராறில் கர்ப்பிணியை கொன்று உடல் எரிப்பு
Published on

கொப்பல்:

கொப்பலில் பணத்தகராறில் கர்ப்பிணியை கொன்று உடல் எரிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கர்ப்பிணி

கொப்பல் (மாவட்டம்) புறநகர் கப்பூரு கிராமத்தைச் சேர்ந்தவர் நேத்ராவதி குரி(வயது 26). இவருக்கு திருமணமாகி விட்டது. தற்போது 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேத்ராவதி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர்.

இந்த நிலையில் நேத்ராவதி தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அதைப்பார்த்த குடும்பத்தினரும், கிராம மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கொலையாளிகளுக்கு வலைவீச்சு

உடனடியாக இதுபற்றி அவர்கள் கொப்பல் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேத்ராவதியின் உடலை கைப்பற்றினர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பணத்தகராறில் நேத்ராவதி கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவரை கொன்று பின்னர் உடல் எரிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

ஆனால் கொலையாளிகள் யார் என்று உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து போலீசார் நேத்ராவதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com