2024ம் ஆண்டு பொது தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும்; மம்தா பானர்ஜி பேச்சு

பா.ஜ.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட ஜெய் பிரகாஷ் மஜும்தார் திரிணாமுல் காங்கிரசில் இன்று இணைந்துள்ளார்.
2024ம் ஆண்டு பொது தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும்; மம்தா பானர்ஜி பேச்சு
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் மாநில குழு கூட்டம் இன்று நடந்தது. இதில், திரிணாமுல் காங்கிரசின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்று உரையாற்றினார். இந்த கூட்டத்தில், பா.ஜ.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட ஜெய் பிரகாஷ் மஜும்தார் திரிணாமுல் காங்கிரசில் இன்று இணைந்துள்ளார்.

கூட்டத்தில் மம்தா பேசும்போது, நாம் சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டும். வருகிற 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். பா.ஜ.க.வினர் கலகக்காரர்கள். அது ஓர் ஊழல் கட்சி. ஜனநாயகத்தினை அழிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

சபையில் நேற்று ஜனநாயகம் காத்ததற்காக திரிணாமுல் காங்கிரசின் மகளிர் எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார். இந்த கூட்டத்தில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com