சத்தீஸ்கரில் நக்சலைட் தம்பதியினர் போலீசில் சரண்

நக்சலைட் தம்பதியினர் சுக்மா மாவட்டத்தில் போலீசாரின் முன்னிலையில் சரணடைந்தனர்.
சத்தீஸ்கரில் நக்சலைட் தம்பதியினர் போலீசில் சரண்
Published on

சுக்மா,

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் ஒரு நக்சலைட் தம்பதியினர் பதுங்கியிருந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தினர். இவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தாக்குதலில் 17 பாதுகாப்பு பணியாளர்கள் பலியானார்கள். மேலும், கடந்த 2021-ம் ஆண்டு இவர்கள் நடத்திய தாக்குதலில் 21 பணியாளர்கள் உயிரிழந்தனர்.

இதற்கிடையே, நக்சலைட் தம்பதியினர் சுக்மா மாவட்டத்தில் நேற்று போலீசாரின் முன்னிலையில் சரணடைந்தனர். இந்த தம்பதியின் தலைக்கு போலீசார் தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com