கடலோர பகுதிகளில் 1,100 பள்ளிகளில் என்.சி.சி. பயிற்சி - ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தகவல்

கடலோர பகுதிகளில் 1,100 பள்ளிகளில் என்.சி.சி. பயிற்சி அளிக்கப்படும் என ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
கடலோர பகுதிகளில் 1,100 பள்ளிகளில் என்.சி.சி. பயிற்சி - ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தகவல்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று என்.சி.சி. முகாம் நடைபெற்றது. அதில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

என்.சி.சி. பயிற்சியை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். நாட்டின் எல்லை பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் என்.சி.சி. பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

அத்தகைய 1,100-க்கு மேற்பட்ட பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அப்பள்ளிகளிலும் என்.சி.சி. பயிற்சி அளிக்கப்படும். என்.சி.சி.யில் மாணவிகள் எண்ணிக்கை 43 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பில் என்.சி.சி. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் அளிக்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com