

புதுடெல்லி,
டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த பயிற்சி டாக்டர்கள் நீட் முதுநிலை படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த கோரி போராட்டத்தில் ஏற்பட்டனர். இதில், அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். எனினும், இந்த சம்பவத்தில் வன்முறை ஏற்பட்டு உள்ளது.
இதில் ஐ.டி.ஓ. பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 7 போலீசார் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் மீது, பணியில் இருந்த காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொது சொத்துகளை சூறையாடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.