‘நீட்’ தேர்வு எழுத வயது வரம்பு: இடைக்கால நிவாரணம் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

‘நீட்’ தேர்வு எழுத வயது வரம்புக்கான இடைக்கால நிவாரணம் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
‘நீட்’ தேர்வு எழுத வயது வரம்பு: இடைக்கால நிவாரணம் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
Published on

புதுடெல்லி,

நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயம் செய்தது. அதன் அடிப்படையில் சி.பி.எஸ்.இ. வெளியிட்ட அறிக்கையில், பொது பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 30 வயதாகவும் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் உள்ளிட்டோர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, சி.பி.எஸ்.இ. அறிவிப்பை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது.

இதனால் வயது உச்சவரம்பை ரத்து செய்யக்கோரி ஜலாலுதீன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும், இந்த ஆண்டில் நீட் தேர்வுகள் நடந்து முடிந்து கலந்தாய்வு நடைபெற்று வருவதால் வயது வரம்பை தளர்த்தி மீண்டும் தேர்வுகளை நடத்த இயலாது. எனவே இந்த ஆண்டு இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்க முடியாது. அடுத்த ஆண்டு வயது வரம்பை நீக்குவது தொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் எனக்கூறி விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com