நேபாளத்தின் ஜனாதிபதியாக பித்யா தேவி பண்டாரி இன்று பதவியேற்பு

நேபாளத்தின் ஜனாதிபதியாக பித்யா தேவி பண்டாரி இன்று பதவியேற்க உள்ளார். #BidhyaDeviBhandari #NepalPresident
நேபாளத்தின் ஜனாதிபதியாக பித்யா தேவி பண்டாரி இன்று பதவியேற்பு
Published on

நேபாளம்,

நேபாளத்தின் ஜனாதிபதியாக பித்யா தேவி பண்டாரி இன்று இரண்டாவது முறையாக பதவி ஏற்க உள்ளார். செவ்வாயன்று நடைபெற்ற ஜனாதிபதிக்கான தேர்தலில் பித்யா தேவி இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காத்மாண்டுவில் நேபாள தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் தொடங்கிய வாக்குப் பதிவு முடிவடைந்தது. நேபாள தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலின்படி , இடது கூட்டணியின் ஜனாதிபதி பண்டாரி 39,275 வாக்குகளைப் பெற்றார். எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் போட்டியாளரான லட்சுமி ராய் 11,730 வாக்குகளைப் பெற்றார்.

சமீபத்தில் நாட்டின் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ரஷ்ய ஜனதா கட்சி-நேபாளம் மற்றும் மத்திய சோசலிசமன்ற நேபாளம் ஆகியோரும் தேர்தலில் ஜனாதிபதி பண்டாரிக்கு வாக்களித்திருந்தனர்.

ஃபெடரல் நேபாளத்தின் முதல் ஜனாதிபதியாக பண்டாரி உள்ளார். அவர் இரண்டு முறை நேபாள ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் ஆவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com