கர்நாடகாவில் புதிய கல்வி கொள்கை இன்று அமல்; முதல்-மந்திரி அறிவிப்பு

கர்நாடகாவில் புதிய கல்வி கொள்கை இன்று அமல்படுத்தப்பட உள்ளது என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் புதிய கல்வி கொள்கை இன்று அமல்; முதல்-மந்திரி அறிவிப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் இன்று தொடங்கப்படும் என அரசு அறிவித்தது. இதன்படி, மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல தயாராகினர்.

இதனை முன்னிட்டு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு கல்வி நிலையம் ஒன்றில் மாணவர்களை சந்தித்து உரையாடினார். அவர்களுக்கு உற்சாகமூட்டினார்.

இதன்பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டு உள்ளன. மாணவ மாணவிகள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கும்படி கேட்டு கொண்டேன். கர்நாடகாவில் புதிய கல்வி கொள்கை இன்று அமல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com