புதிய ஐ.டி. விதிகளை பின்பற்ற வேண்டும்; முகநூல், கூகுள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

புதிய ஐ.டி. விதிகள் மற்றும் நாட்டுக்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய ஐ.டி. விதிகளை பின்பற்ற வேண்டும்; முகநூல், கூகுள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி,

முகநூல் மற்றும் கூகுள் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான புதிய ஐ.டி. (தகவல் தொழில்நுட்பம்) விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.

சமூக ஊடக பயனாளாகளின் குறைகளை தீப்பதற்காக உள்நாட்டிலேயே தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அந்த நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகள் புதிய விதிகள் மூலமாக நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்நிலையில், நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் நாட்டிலுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற நிலை குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com