எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ் குமார் முயற்சிக்கு பா.ஜ.க. பதிலடி

நாடு இப்போது நிலையான அரசைத்தான் விரும்புகிறது என பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ் குமார் முயற்சிக்கு பா.ஜ.க. பதிலடி
Published on

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, "நாட்டில் 2024-ம் ஆண்டில் பிரதமர் பதவி காலியாக இருக்காது. பிரதமர் மோடி மீண்டும் பதவிக்கு வருவார். இந்த நாட்டில் பகல் கனவு காண்பதற்கு தடை ஏதாவது இருக்கிறதா, என்ன?" என கூறினார்.

மேலும், " இது தேவகவுடா காலம் அல்ல, குஜ்ரால் காலமும் இல்லை என்பதை நிதிஷ் குமாருக்கு நினைவுபடுத்துகிறேன். நாடு இப்போது நிலையான அரசைத்தான் விரும்புகிறது" எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com