மே.3 ஆம் தேதி வரை விமானப்போக்குவரத்து முற்றிலும் ரத்து: விமான போக்குவரத்து துறை அறிவிப்பு

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மே 3 ஆம் தேதி வரை விமான போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மே.3 ஆம் தேதி வரை விமானப்போக்குவரத்து முற்றிலும் ரத்து: விமான போக்குவரத்து துறை அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்தது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் 24ந்தேதி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனை தொடர்ந்து ரெயில், விமான சேவை அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் மே- 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். இதனால் போக்குவரத்து செயல்பட தொடர்ந்து தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ரயில் போக்குவரத்து மே 3-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மே 3-ம் தேதி வரை அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com