அந்தமான் நிகோபார் தீவுகளில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகளில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை
Published on

போர்ட் பிளேர்,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. ஆனாலும், ஒருசில மாநிலங்கள்/ யூனியன்பிரதேசங்களில் வைரஸ் பரவல் கணிசமாக குறைந்துள்ளது. அந்த வகையில், யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது.

இந்நிலையில், அந்தமான் நிகோபார் தீவுகளில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் அங்கு யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை.

அந்தமான் தீவுகளில் இதுவரை 7,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,429 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 129 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com