ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை 62 ஆக அதிகரிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை 62 ஆக அதிகரிக்கும் திட்டம் எதுவுமில்லை என அரசு இன்று தெரிவித்துள்ளது. #CentralGovernment
ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை 62 ஆக அதிகரிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை மாற்றுவதற்கு அரசு ஒப்புதல் அளித்து உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய பணியாளர்களுக்கான இணை மந்திரி ஜிதேந்திரா சிங் இன்று அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ல் இருந்து 62 ஆக அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என கூறினார். நாட்டில் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com