திருநங்கையுடன் காதல்...! மனைவியின் அனுமதியுடன் வாலிபர் திருமணம் ; ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர்

மனைவியின் ஒப்புதலுடன் திருநங்கையை திருமணம் செய்து கொண்ட வாலிபர் மூவரும் ஒரே வீட்டில் வாழ முடிவு செய்துள்ளனர்.
திருநங்கையுடன் காதல்...! மனைவியின் அனுமதியுடன் வாலிபர் திருமணம் ; ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர்
Published on

புவனேஸ்வர்

ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பஹிர்( 32) என்பவர் திருமணமாகி 2 வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு அறிமுகமானார். நாளடைவில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

பஹிர் தனது காதலை ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனால் அவரது காதலை அவரின மனைவி கண்டுபிடித்தார். இது குறித்து தனது கணவருடன் மனைவி பேசினார். அவர்களின் காதலை பஹரின் மனைவி அங்கீகரித்தார்.

அதோடு நிற்காமல் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார். பஹிர் மனைவி தான் இருவரையும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். உடனே இருவரும் ஒத்துக்கொண்டனர். இருவருக்கும் திருநங்கைகள் புடைசூழ கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

இத்திருமணத்தை முன்னின்று நடத்திய காமினி இது குறித்து கூறுகையில்,:-

இருவரின் விருப்பத்தின் பேரில் மனைவியுடன் ஒப்புதலுடன் இத்திருமணம் நடந்துள்ளதால் இது அபூர்வமான திருமணமாகும். இத்திருமணம் குறித்து மறுபரிசீலனை செய்து கொள்ளும்படி திருநங்கை சமுதாயத்தினர் கேட்டுக்கொண்டனர். இருவரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் செய்து வைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com