

லக்னோ,
இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காங்கிரசைத் தொடர்ந்து, தற்போதைய பா.ஜனதா அரசும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரை புறக்கணித்து வருகிறது. மத்திய அரசின் இரக்கமற்ற அணுகுமுறையால்தான் இடஒதுக்கீடு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது பெரிதும் துரதிருஷ்டவசமான நிகழ்வாகும். ஆகவே, இடஒதுக்கீடு முறையை அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். அப்போதுதான், மேற்கண்ட சமூகத்தினரின் இடஒதுக்கீடு உரிமை பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.